![]() My Places Click Here
|
![]() |
இங்கு உள்ள அனைத்தும் பிற வலையுலக நண்பர்கள் எழுதியது . அவர்களுக்கு நன்றிகள் பல ...
Saturday, January 19, 2008
வெட்கவியல்!
எப்போதாவது உன்னிடம்
ஏதாவது நான் கேட்பது,
பெற வேண்டும்
என்றல்ல
ம்ஹம் என்று
உதடு பிதுக்கி
சிணுங்கல் கவிதை
சிந்துவாயே...
ஆசை ஆசையாய்
அதை
வாசிக்கத்தான்!
ஊர்வலம் போக
அம்மன் தேர் ஏறியது
பரவசமாயினர் பக்தர்கள்
ஊருக்குப் போக
நீ கார் ஏறினாய்
பாவமானேன் நான்.
சாலையில் எப்போதும்
வலப் புறமாகச் செல்லும்
வாகனங்களைப் போல
நான் எப்போதும்
உன் நிழல் புறமாகவே நடக்கிறேன்...
எப்போதும் உன் நிழல்
என் மீது விழவேண்டும் என்பதற்காக.
இரு விழிகளில்
ஒரு பார்வையைப் போல
நம் இரு இதயத்திற்கும்
ஒரே காதல்தான்.
புதுமை.காம் இங்கே சொடுக்கவும்
நன்றி-தபூ சங்கர்
Labels:
தபூ சங்கர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment