இருட்டப் போகுது... நான் கிளம்பறேன் என்று எப்போதும் போல எழுந்தாய்.
இன்றாவது இருட்டும் வரை இரேன்! உன்னை ஒரே ஒரு முறை இருட்டில் பார்க்கணுமே! என்றேன். எதுக்கு? என்றாய் வேகமாக.
உனக்கென்று ஒரு வெளிச்சம் இருக்கிறதோ என்று எனக்கு ரொம்ப நாளாய் ஒரு சந்தேகம். இன்றாவது உன்னை இருட்டில் பார்த்தால் தெரிந்துவிடும் சேதி! என்றேன்.
வெளிச்சமும் கிடையாது... கிளிச்சமும் கிடையாது! என்று ஓடிப் போனாய்.
அடுத்த நாள் காலை ஆற்றங்கரையில் அமர்ந்து, எப்படித்தான் உன் வெளிச்சத்தை உறுதி செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். என் பின்னால் வந்து, என் கண்களைப் பொத்திக்கொண்டு யாருனு சொல்லுங்க? என்றாய் குரலை மாற்றி.
துள்ளிக் குதித்தெழுந்து கத்தினேன்... என் தேவதைக்கென்று ஒரு வெளிச்சம் இருக்கிறது. நான் கண்டுபிடிச்சிட்டேன்!?
என்ன உளர்றே? என்றாய்.
இல்லையில்லை. நீ என் கண்ணைப் பொத்தினால் எனக்கு இருட்டாத்தான் ஆகியிருக்கணும். ஆனால், எனக்கு ஒரு வெளிச்சம் தெரிஞ்சதே... அதுதான் உன் வெளிச்சம்! என்றேன்.
பொய் சொல்லாத என்று வெட்கப்பட்டாய் நீ இன்னும் பிரகாசமாய்!
நமக்குக் கல்யாணமான பிறகு, வாரம் ஒரு நாள் நீ என்னை வெளியே கூட்டிப் போகணும். ஊரைச் சுற்றிக் காட்டணும் என்றாய்.
தாராளமா! ஆனால், அதற்குப் பதிலாக வாரத்தின் மீதி ஆறு நாட்களும், வீட்டுக்குள்ளேயே நீ எனக்கு, உன்னைச் சுற்றிக்காட்டணும் என்றேன்.
ம்ம்ம்... சுற்றிக்காட்ட நான் என்ன ஊரா? என்றாய்.
ஊர் இல்லை... நீ என் உலகம்!
முதலிரவு அறையில் உன் வருகைக்காகக் காத்திருக்கையில்... நேற்று வரை என் எல்லா இரவுகளையும் காவல் காத்த உன் கனவுகள் கவலையோடு வந்து நின்றன... இனிமேல் எங்களை நீ காண்பாயா... அல்லது நாங்கள் எங்காவது போய்விட வேண்டியது தானா என்றன வேதனையாக.
ச்சே... ச்சே! ஏன் இப்படியெல்லாம் பேசு கிறீர்கள். நீங்கள் எங்கும் போக வேண்டாம். என்னுடனேயே இருந்து நீங்கள் எல்லாம் நனவாவதை வேடிக்கை பாருங்கள். அதற்குத் தானே இவளை நான் திருமணமே செய்தேன் என்றேன் பால் சொம்புடன் வந்த உன்னைக் காட்டி.
இனி, வாரம் ஒரு நாள் முத்த விரதம் இருக்கப் போகி றேன். அன்று உனக்கு முத்தம் எதுவும் தர மாட்டேன் என்றாய் நீ.
ஏன்... உன் முத்தங்கள் தீர்ந்துபோய் விடுமா? என்றேன் திகைப்புடன்.
யார் சொன்னது? முத்தத்துக்கு ஒரு நாள் விடுமுறை விட்டுவிட்டு... மறுநாள் மீண்டும் தொடங்கும் போது... அப்போதுதான் புதிதாய் உனக்கு முத்தம் கொடுப்பது மாதிரி ஒரு பரவசம் ஏற்படுமே, அதற்குத்தான்!? என்றாய் முகத்தை மூடிக் கொண்டு.
ஏதேது... என்னை மிஞ்சி விடுவாய் போலிருக்கிறதே?? என்றேன்.
?ம்ஹ?ம்... நீதான் வார விடுமுறையெல்லாம் விரும்பாத வேலைக்காரனாச்சே!? என்று என்னை இழுத்தாய் நீ!
நீ சமைக்கும்போது, நான் உதவ வந்தால் நீ ஏன் எப்போதும் வேண்டாம் என்றே தடுக்கிறாய்? என்றேன்.
விதவிதமான முறையில் நீ எனக்குக் காதலை வழங்குவது மாதிரி, நான் உனக்குக் காதலை வழங்கும் வழிகளில் ஒன்று இந்தச் சமையல். இதில் நீ எனக்கு உதவிவிட்டால், என் காதல் குறை யுள்ள காதல் ஆகி விடுமே.
அதனால், சமர்த்துப் பிள்ளையாய் தள்ளி அமர்ந்து, உன் ஆசை மனைவி உனக்காகக் காதல் சமைப்பதை வேடிக்கை பார்! என்று என்னிடம் சொல்லிவிட்டு, காரியத்தில் கண்ணானாய். இல்லை... இல்லை... காதலில் கண்ணானாய்!
இன்றாவது இருட்டும் வரை இரேன்! உன்னை ஒரே ஒரு முறை இருட்டில் பார்க்கணுமே! என்றேன். எதுக்கு? என்றாய் வேகமாக.
உனக்கென்று ஒரு வெளிச்சம் இருக்கிறதோ என்று எனக்கு ரொம்ப நாளாய் ஒரு சந்தேகம். இன்றாவது உன்னை இருட்டில் பார்த்தால் தெரிந்துவிடும் சேதி! என்றேன்.
வெளிச்சமும் கிடையாது... கிளிச்சமும் கிடையாது! என்று ஓடிப் போனாய்.
அடுத்த நாள் காலை ஆற்றங்கரையில் அமர்ந்து, எப்படித்தான் உன் வெளிச்சத்தை உறுதி செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். என் பின்னால் வந்து, என் கண்களைப் பொத்திக்கொண்டு யாருனு சொல்லுங்க? என்றாய் குரலை மாற்றி.
துள்ளிக் குதித்தெழுந்து கத்தினேன்... என் தேவதைக்கென்று ஒரு வெளிச்சம் இருக்கிறது. நான் கண்டுபிடிச்சிட்டேன்!?
என்ன உளர்றே? என்றாய்.
இல்லையில்லை. நீ என் கண்ணைப் பொத்தினால் எனக்கு இருட்டாத்தான் ஆகியிருக்கணும். ஆனால், எனக்கு ஒரு வெளிச்சம் தெரிஞ்சதே... அதுதான் உன் வெளிச்சம்! என்றேன்.
பொய் சொல்லாத என்று வெட்கப்பட்டாய் நீ இன்னும் பிரகாசமாய்!
நமக்குக் கல்யாணமான பிறகு, வாரம் ஒரு நாள் நீ என்னை வெளியே கூட்டிப் போகணும். ஊரைச் சுற்றிக் காட்டணும் என்றாய்.
தாராளமா! ஆனால், அதற்குப் பதிலாக வாரத்தின் மீதி ஆறு நாட்களும், வீட்டுக்குள்ளேயே நீ எனக்கு, உன்னைச் சுற்றிக்காட்டணும் என்றேன்.
ம்ம்ம்... சுற்றிக்காட்ட நான் என்ன ஊரா? என்றாய்.
ஊர் இல்லை... நீ என் உலகம்!
முதலிரவு அறையில் உன் வருகைக்காகக் காத்திருக்கையில்... நேற்று வரை என் எல்லா இரவுகளையும் காவல் காத்த உன் கனவுகள் கவலையோடு வந்து நின்றன... இனிமேல் எங்களை நீ காண்பாயா... அல்லது நாங்கள் எங்காவது போய்விட வேண்டியது தானா என்றன வேதனையாக.
ச்சே... ச்சே! ஏன் இப்படியெல்லாம் பேசு கிறீர்கள். நீங்கள் எங்கும் போக வேண்டாம். என்னுடனேயே இருந்து நீங்கள் எல்லாம் நனவாவதை வேடிக்கை பாருங்கள். அதற்குத் தானே இவளை நான் திருமணமே செய்தேன் என்றேன் பால் சொம்புடன் வந்த உன்னைக் காட்டி.
இனி, வாரம் ஒரு நாள் முத்த விரதம் இருக்கப் போகி றேன். அன்று உனக்கு முத்தம் எதுவும் தர மாட்டேன் என்றாய் நீ.
ஏன்... உன் முத்தங்கள் தீர்ந்துபோய் விடுமா? என்றேன் திகைப்புடன்.
யார் சொன்னது? முத்தத்துக்கு ஒரு நாள் விடுமுறை விட்டுவிட்டு... மறுநாள் மீண்டும் தொடங்கும் போது... அப்போதுதான் புதிதாய் உனக்கு முத்தம் கொடுப்பது மாதிரி ஒரு பரவசம் ஏற்படுமே, அதற்குத்தான்!? என்றாய் முகத்தை மூடிக் கொண்டு.
ஏதேது... என்னை மிஞ்சி விடுவாய் போலிருக்கிறதே?? என்றேன்.
?ம்ஹ?ம்... நீதான் வார விடுமுறையெல்லாம் விரும்பாத வேலைக்காரனாச்சே!? என்று என்னை இழுத்தாய் நீ!
நீ சமைக்கும்போது, நான் உதவ வந்தால் நீ ஏன் எப்போதும் வேண்டாம் என்றே தடுக்கிறாய்? என்றேன்.
விதவிதமான முறையில் நீ எனக்குக் காதலை வழங்குவது மாதிரி, நான் உனக்குக் காதலை வழங்கும் வழிகளில் ஒன்று இந்தச் சமையல். இதில் நீ எனக்கு உதவிவிட்டால், என் காதல் குறை யுள்ள காதல் ஆகி விடுமே.
அதனால், சமர்த்துப் பிள்ளையாய் தள்ளி அமர்ந்து, உன் ஆசை மனைவி உனக்காகக் காதல் சமைப்பதை வேடிக்கை பார்! என்று என்னிடம் சொல்லிவிட்டு, காரியத்தில் கண்ணானாய். இல்லை... இல்லை... காதலில் கண்ணானாய்!
நன்றி-தபூ சங்கர்
No comments:
Post a Comment